Header Ads



தெஹி­வளை அரபு வல­ய­மாக மாற்­றப்­படுகிறது - நடுங்குகிறார் ஆனந்த தேரர்

தெஹி­வளை, பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­ச­லுக்கு அரபு நாடு­களைச் சேர்ந்த அரே­பி­யர்கள் தொடர்ந்து வந்து செல்­கி­றார்கள். இந்தப் பிர­தேசம் அரபு வல­ய­மாக மாற்­றப்­படும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

இதனால் இந்தப் பள்­ளி­வாசல் இயங்­கு­வதை பிர­தே­ச­வா­சி­களும் குரு­மார்­களும் எதிர்­க்கி­றார்கள் என பௌத்த சங்க சம்­மே­ள­னத்தின் செய­லாளர் ஆனந்த சாகர தேரர் குறிப்­பிட்டார்.

பாத்யா மாவத்தை பௌசுல் அக்பர் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­கான கார­ணங்கள் பற்றி விளக்­கு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில் “பள்­ளி­வாசல் ஸ்ரீ மகா விகாரை பாதை­யி­லி­ருந்து 20 மீற்றர் தூரத்­திலே அமைந்­துள்­ளது. பழைய வீடொன்­றாக இருந்­தது. இந்த வீட்­டுக்குப் பின்­பு­ற­மா­கவே புதிய கட்­டிடம் அமைக்­கப்­பட்டு வரு­கி­றது.

பல வரு­டங்­க­ளாக இங்கு சமய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வந்­தன. நாம் பெரி­து­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. ஆனால் நாள­டைவில் பல நாடு­களைச் சேர்ந்த அர­பியர் பல்­வேறு கலா­சார உடை­யுடன் இங்கு வருகை தரு­வ­தற்கு ஆரம்­பித்து விட்­டார்கள். இதனால் இப்­ப­குதி மக்­களும் தேரர்­களும் அரபு வல­ய­மொன்று உரு­வாகி விடும் என்று அஞ்­சு­கி­றார்கள்.

அத்­தோடு சமய பாட­சாலைக் கட்­ட­ட­மொன்று அமைப்­ப­தற்­கென்றே மாந­கர சபை­யி­லி­ருந்து அனு­மதிப் பத்­திரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. தற்­போது அந்தக் கட்­டட அனு­மதிப் பத்­தி­ரத்தின் நிபந்­த­னைகள் மீறப்­பட்டு கட்­டட வேலைகள் நடை­பெற்று வரு­கின்­றன.

மாந­க­ர­சபை கட்­டட வேலை­களை நிறுத்தி வைத்­தி­ருந்­தாலும் உள்ளே என்ன நடக்­கி­றது என்று தெரி­யாது.

நாம் இந்தப் பிரச்­சி­னையை சட்­டத்தின் மூலம் தீர்த்துக் கொள்­வதே சிறந்­தது  எனக் கரு­து­கின்றேன். பிரச்­சனை நீடித்தால் அது பல விளை­வு­க­ளுக்குக் கார­ண­மாக அமை­யலாம். அதனால் இப்­பி­ர­தே­சத்தில் சக வாழ்­வி­னையும் நல்­லு­ற­வையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நிரந்­தர தீர்­வொன்­றினை எட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­களை தெஹி­வளை கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங்க தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேயர் தன­சிறி அம­ர­துங்க பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சமயப் பாட­சாலை கட்­ட­டத்தின் விஸ்­த­ரிப்பு வேலை­க­ளுக்கு பிர­தேச மக்கள் எதிர்ப்­பினை வெளி­யி­டு­வதால் இது தொடர்­பாக விசா­ரணை நடாத்தி தீர்வு பெறும் வரை கட்­டட விஸ்­த­ரிப்பு வேலை­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடி­தத்தின் பிர­திகள் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த சாரா­னந்த தம்ம நிகே­த­னய என­மல்­தெ­னியே சாரா­னந்த தேர­ருக்கும் ஹத்­போ­திய ரஜமகா விகாரை கரவனெல்லே காசியப்ப தேரர் மற்றும்  பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

-விடிவெள்ளி ARA.Fareel-

10 comments:

  1. Brother A.R.A. Fareel,
    THE MUSLIM VOICE wish to thank you very much for lierally TRANSLATING the contents of "COMMENTS" posted/written by the MUSLIM VOICE in the "jaffnamuslim.com web news site/web forum and publishing it in the Tamil Newspaper - "VIDIVELLI". We would appreciated if you could quote "THE MUSLIM VOICE" as a source as THE MUSLIM VOICE spends many hours of reasearch work and investigative journalism to produce these comments. Rather than writing long articles, THE MUSLIM VOICE wishes to contribute "CONTENTS" to COMMENTS COLUMS to engage the Muslim readers of popular sicial media Tamil sites like the "jaffnamuslim.com". You can follow The Muslim Voice in Adaderana.lk, nation.lk, colombotelegraph.com, colombogazette.com, The New Hindu, Lankaweb.com, sundayleader.lk, sundaytimes.lk, dailynews.lk and the lankamuslims@yahoogroups.com. We are sad to say the dailymirror.lk completely REJECTS our comments. We also have indications that the Social Media Team at the Presidential Secretariat are fully tracking our comments especially and we have experienced response to our comments by way of action in the society from the political VVIP's of the Yahapalana government. We are sorry that we cannot make our COMMENTS in the TAMIL language as we do not have the facilities at the moment. We hope a Tamil journalist/writer will VOLUNTEER to write COMMENTS in Tamil in the jaffnamuslims.com which in our opinion is turning to become a popular news source to Sri Lanka Muslims locally and those domiciled/living abroad, especially in the Middleeast.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  2. Anantha therar udanadiyaha punar valvu maiyathukku anuppappada vendum. Ivarkalaipponravarkal thamum peethiadainthu arukil irupporkalukkum payam oodduvarkal.

    ReplyDelete
  3. யார் இந்த நூர் நிசாம்?எல்லா ஊடகம்களிலும் முஸ்லிம் விரோத பின்னூட்டம் செயஹிறான்.beware of this scum-berg.

    ReplyDelete
  4. EPADI ARABIGAL ENRU SOLLURAN NAMMAVARGALUM JUBBA POTU THIRVATHAL ARABI ENGIRAN ARABI PODUM JUBBA SUNNTH ENRU THAPPU KANAKU NAMMAVARGAL ITHUKU MATRA DRESS VIDA PRICE ADIGAM VEEN VIRAYAM IPPO VEEN PALI NABIKU 2 palya dress irunthau

    ReplyDelete
  5. fahim
    நபி அவர்களும் ஸஹாபாக்களும் ஜுப்பா போடவில்லையா?

    ReplyDelete
  6. அந்த அரபிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் உண்மையில் அரபு நாட்டில் இருந்து வருகின்றவர்களா, அல்லது இங்கே உள்ள உள்ளூர் கேஸுகள் அரபி அடிமைகளாக மாறி, அரபியின் ஆடையை அப்படியே கொப்பி அடிக்கின்றனவா என்று தெரியவில்லை. ஏற்கனவே கருப்பு முகமூடிகள் அதிகரித்துவிட்ட நிலையில், பெளத்தர்கள் அப்படி சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரபு அடிமைகளே ஏற்படுத்திக் கொடுத்து உள்ளனர்.

    (குறிப்பு : "அரபு அடிமைகள்" என்பதை, "முஸ்லிம்கள்" என்பதுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் நீண்ட வரலாறு உண்டு, ஆனால் "அரபு அடிமைகள்" கடந்த இரு தசாப்தங்களுக்குள் உருவானவை.)

    ReplyDelete
    Replies
    1. Auto dirver dö't talk much go to hire

      Delete
  7. Rizvin நீங்களும் அரபு அடிமையாக ( தாடி வைத்து , தவ்கீத் வெறியராக - அதற்கு முன் ஜெமாதே இஸ்லாமி வெறியராக ) இருந்தவர்தானே? என்ன நடந்தது? காசு கொடுக்கவில்லையா அல்லது பெண் தரவில்லையா?
    அல்லது இவை இரண்டும் கிடைக்க நீங்கள் போட்ட வேஷம் கலைந்து விட்டதா?

    ReplyDelete
  8. Voice, காசுக்காகவும், பெண்ணுக்காகவும்தான் நீங்கள் முஸ்லிமாக இருக்கின்றீர்கள், அதே காரனங்களுக்காத்தான் இங்கே இப்படியான கோழைத்தனமான வேடத்தில் கொமன்ட் பண்ணுகின்றீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

    ஆனாலும் நான் உங்கள் போன்ற கீழ்த்தரமான தரத்தில் இல்லை.
    இது போன்ற காழ்ப்புணர்வு கருத்துக்களுக்கு இதன்பிறகு பதில் அளிக்கப்பட மாட்டாது.

    ReplyDelete
  9. Rizvin Good Joke. When you promote yourself to the world in Facebook with your Seasonal comments ( காலதிற்கு காலம் வேஷம் மாறி ) everyone knows.
    You have invited yourself to a discussion like this, if you know me your answer and approach will change ? Then itself will make you a selfish.
    The world we live is too close now. When you roam with full beard and Islam the suddenly became fully shaved and targeting Islam everyone will think what has happened to you. So they will decide to dig a little deep to find.
    உங்கள Facebook ஐ பார்ததாலே தெரியும். யார் எவ்வளவு கீழ்ததரமாக போயுள்ளார்கள் என்று.

    ReplyDelete

Powered by Blogger.