Header Ads



ஹஜ் குழு, தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் நடந்தவை

-ARA.Fareel-

ஹஜ் குழு இவ்­வ­ருடம் ஹஜ் கோட்­டாவை கையாண்ட புதிய முறை­யின்­படி ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் நேற்று -28- உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் ஹஜ் குழு­விற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கின் விசா­ர­ணையை அடுத்­த­வ­ருடம் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது.

மனு­தா­ரர்­களால் புதிய முறைக்கு தடை­யுத்­த­ரவு கோரப்­பட்டும் அதனை நீதி­மன்றம் நிரா­க­ரித்­தது.

மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளான கரீம் லங்கா டிரவல்ஸ், அம்ஜா டிரவல்ஸ், இக்ராஃ டிரவல்ஸ் ஆகி­யன இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக இவ்­வ­ழக்­கினை தாக்கல் செய்­தி­ருந்­தன. பிர­தி­வா­தி­க­ளாக ஹஜ் குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் என்போர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த வழக்­கிற்கு இடை­யீட்டு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 10 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இடை­யீட்டு மனுவை தாக்கல் செய்­தி­ருந்­தனர். மனுவில் இவ்­வ­ரு­டத்­துக்­கான கோட்டா கையா­ளப்­பட்ட முறை­மை­யினால் ஹஜ் யத்­தி­ரி­கர்கள் நலன் பேணப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் கட்­ட­ணங்­களில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணத்தில் முக­வர்­களைத் தெரிவு செய்ய முடி­யு­மா­ன­தாக இந்த புதிய முறை அமைந்­துள்­ளதால் புதிய முறையை அமுல்­ப­டுத்த உத்­த­ரவு வழங்­கும்­ப­டியும் நீதி­மன்­றினைக் கேட்­டி­ருந்­தனர்.

இடை­யீட்டு மனுவின் விசா­ர­ணை­யின்­போது ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி புதிய முறையே சிறந்­தது என வாதிட்டார்.

ஹஜ் கமிட்டி உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள வழி­மு­றை­களை (Guide Lines) பின்­பற்­றி­யுள்­ள­தாகக் கூறினார். யாத்­தி­ரி­கர்கள் எந்த முகவர் மூலம் பய­ணிக்க வேண்டும் என ஹஜ் கமிட்டி தீர்­மா­னிக்­காது யாத்­தி­ரி­கர்­களே தமது முக­வர்­களைத் தீர்­மா­னிக்கும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முக­வர்­களின் தனி உரிமை இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ள­தெ­னவும் ஹஜ் கட்­ட­ணங்கள் புதிய முறையின் கீழ் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் வாதிட்டார்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் விப­ரங்கள் அடங்­கிய தர­வுகள் சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைக்க வேண்­டிய இறுதித் தினம் ஜூலை மாதம் 7 ஆம் திக­தி­யாகும் என்றும் சட்­டத்­த­ரணி தனது வாதத்தை முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்து உயர்­நீ­தி­மன்றம் மார்க்கக் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­க­ரு­தியும் புதிய முறையில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஹஜ் குழு­வுக்கு அனு­மதி வழங்­கி­யது.

பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பணிப்­பாளர் எம்.எம்.எம்.ஸமீல் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுரேன் ஞானராஜ் மற்றும் ஹஜ் கமிட்­டியின் சார்பில் சட்­டத்­த­ரணி பர­த­லிங்கம் உட்­பட 9 சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

வாதி­க­ளான மூன்று ஹஜ் முக­வர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மனோர டி சில்வா, ருஷ்தி ஹபீப், இரேசா காளி­ய­தாச ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

உயர் நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ரவு தொடர்பில் ஹஜ் குழு உறுப்­பினர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரி­விக்­கையில்;
இது ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஹஜ் குழு­வுக்கும் கிடைத்த வெற்­றி­யாகும். புதிய ஹஜ் வழி­மு­றைக்கு உயர்­நீ­தி­மன்றம் தடை விதிக்க வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும் என்றார்.

வழக்­கினைத் தாக்கல் செய்­தி­ருந்த மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­களில் ஒரு முகவர் நிலையமான கரீம் லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் கரீம் ஹாஜியார் கருத்து தெரிவிக்கையில்;

‘வழக்கு இன்னும் முடியவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஓர் இடையீட்டு மனுவினைத் தாக்கல் செய்து வழக்கினை தொடர்வதற்கு எம்மால் முடியும்.

அப்படிச் செய்தால் ஹாஜிமாரே பாதிக்கப்படுவார்கள். அதனால் ஹாஜிமாரின் நலன்கருதி நாம் மௌனமாக இருக்கிறோம்’ என்றார். விடிவெள்ளி

No comments

Powered by Blogger.