Header Ads



ஞானசாரரின் குரோதப் பேச்சு - பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு வழியமைத்துக் கொள்ள வேண்டாம் என முஸ்லிம்களை அச்சுறுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் உரை அடங்கிய டி.வி.டி ஒன்றும் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

5 comments:

  1. அரசாங்கம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை.

    முன்பு கைது செய்த ஞான சாராரை இன குரோத பேச்சுக்களை மீண்டும் பேசினால் திரும்ப கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்து தான் நீதி மன்றம் விடுதலை செய்தது. அப்படி பேசினத்துக்கான ஆதாரம் இருக்கும் போது ஏன் அவனை ஒன்றும் செய்யாமல் அரசு மௌனியாக இருக்கிறது என்பது தான் புரியவில்லை.

    ReplyDelete
  2. அப்போது இந்த அ'ஞானதேர' ஆட்டங்களை அரசு கண்டு கொள்ளவேயில்லை இப்போது
    இந்த அரசும் அவ்வாரே இருக்கப் பார்க்கிறது.

    ReplyDelete
  3. அவன் இவன் என்ற வாரத்தை no match.

    ReplyDelete
  4. அவன் பேசும் அசிங்கமான வார்த்தைகளை விடவுமா?

    ReplyDelete
  5. "Kaadaiththanam pannugiraar" enru sollamaatoam ,
    "pannugiraan" enruthaan varum ! English moliyil
    appadi illai aanaal thamil ,Sinhala moligalil
    appadi irukkirazu. Kettavanai Kettavar enru
    thamilil gowravamaga alaippazillai. Singalaththilum
    appadiththaan.

    ReplyDelete

Powered by Blogger.