Header Ads



ஜனாதிபதியாகும் டிலானின், கனவு பலிக்குமா..?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில்ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தனக்கு தகுதிகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர்டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்தவரை ஜனாதிபதியை தெரிவு செய்வது தேர்தல் மூலம் என்றும்,அதற்காகஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்கும் போதுநாங்களும் ஒருவரை தேட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிஎல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டத்திற்கு அமைய மஹிந்தவால் இதில் போட்டியிடமுடியாது. சந்திரிக்காவாலும் முடியாது.ஆனால் என்னால் முடியும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இன்று கூறி நாளை செயல்படுத்த முடியாது.

பசில் ராஜபக்ச போன்றவர்கள்கட்சியை அழிப்பவர்கள்,கட்சி தோற்றுவிட்டால் விட்டுவிட்டு ஓடுபவர்கள் போன்றஒப்பந்தக்காரர்கள் இருக்கும் போது எம்மால் நினைத்தவற்றை செய்யமுடியாது என்றும்அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.