Header Ads



நீதிமன்றத்தினுள் சைகை காட்டிய, பவித்திராவுக்கு நீதிபதி எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் தனது வழக்கறிஞரிடம் சைகை முறையில் நடந்து கொண்டமையினால்,கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியாராச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் பல முறை இவ்வாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என்றும், நீதிமன்றத்தினுள் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் விடுப்பது தவறு என்றும் கொழும்பு மேலதிக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நபர் ஒருவர் வீடு வாங்கித் தருவதாக கூறி, ரூபா 2 மில்லியனை பெற்று மோசடி செய்த வழக்கு ஒன்றிற்காகவே வன்னியாராச்சி நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.