அநுரகுமரவின் உதவி வேண்டாம் - சோமவங்ச உறவினர்கள் கொதிப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் இறுதிச் சடங்குகளில் அந்த முன்னணியின் தற்போதைய தலைவர் தலையிட தயாராகி வருவது தொடர்பில், சோமவங்சவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சோமவங்ச அமரசிங்க உயிருடன் இருந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் அவர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தாம் கடும் அதிருப்தியில் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
உறவினர்களின் தலைமையில் இறுதிச் சடங்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு வெளியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என மக்கள் சேவை கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
காலஞ் சென்ற சோமவங்ச அமரசிங்கவின் உடல் பத்தரமுல்லை - சிங்கபுர பிரதேசத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரியைகள் நாளை மறுதினம் பொரளை கனத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
சோமவங்ச அமரசிங்க உயிருடன் இருந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் அவர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தாம் கடும் அதிருப்தியில் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
உறவினர்களின் தலைமையில் இறுதிச் சடங்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு வெளியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என மக்கள் சேவை கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
காலஞ் சென்ற சோமவங்ச அமரசிங்கவின் உடல் பத்தரமுல்லை - சிங்கபுர பிரதேசத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி கிரியைகள் நாளை மறுதினம் பொரளை கனத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
Post a Comment