Header Ads



பொலிஸார் அடாவடி, தெஹி­வளை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்புக்கு மீண்டும் தடை விதிப்பு

-விடிவெள்ளி ARA.Fareel-

தெஹி­வளை பாத்யா  மாவத்தை  பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு  பணி­களை தொடர்ந்து  ஒரு­வார காலம் முன்­னெ­டுப்­ப­தற்கு நேற்று முன்­தினம்  (06) திங்­கட்­கி­ழமை அனு­மதி  வழங்­கி­யி­ருந்த  பொலிஸார் அன்று இரவு  மீண்டும் பள்­ளி­வாசல்  விஸ்­த­ரிப்பு  பணி­க­ளுக்கு   தடை­வி­தித்­தனர். 

திங்­கட்­கி­ழமை  இரவு  இரண்டு பொலிஸ் ஜீப் வண்­டி­களில்  பள்­ளி­வா­ச­லுக்கு வருகை  தந்த  பொலிஸாரே  விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட்­டனர். 

அப்­ப­கு­தி­யி­லுள்ள பெளத்த தேரர்கள் எதிர்ப்பு தெரி­விப்­ப­த­னாலே தடை விதிப்­ப­தா­கவும் கூறினர். 

பாத்யா மாவத்தை  பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு பொலிஸார் தொடர்ந்து  தடை­வி­திப்­பது தொடர்­பாக கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், கிரா­மிய பொரு­ளா­தார பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி, பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் முஜிபுர்  ரஹ்மான் என்போர்  சட்­டமும் ஒழுங்கும்  மற்றும் தெற்கு  அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல  ரத்­னா­யக்­கா­விடம் முறை­யிட்­டனர். 

அமைச்சர் சாகல ரத்­னா­யக்க விஸ்­த­ரிப்பு  பணி­களைத் தொடர்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்தார். 

இதனையடுத்து அமைச்சர் ரிசாத் பதி­யுதீன்,  பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்  ஆகியோர் நேற்று முன்­தினம் இரவு  பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம்  செய்து விஸ்­த­ரிப்புப்  பணி­களைப்  பார்­வை­யிட்­டனர்.  

நேற்று  முன்­தினம் திங்­கட்­கி­ழமை  காலை தெஹி­வளை  பெரி­ய ­பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற  கலந்­து­ரை­யா­டலின்  பின்பே பிர­தி­ப் பொ­லிஸ்மா அதிபர் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்புப்  பணி­களை  ஒரு­வார காலம் முன்­னெ­டுப்­ப­தற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்தார்.

இந்தக்  கலந்­து­ரை­யா­டலில்  சிரேஷ்ட  பொலிஸ்  அத்­தி­யட்­சகர்,  உதவிப் பொலிஸ்  அத்­தி­யட்­சகர்  மற்றும் கொஹு­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி  என்போர் கலந்து கொண்­டனர்.  

பள்­ளி­வாசல் தரப்பில் நிர்­வா­கிகள், அமைச்­சர்கள்  ரிசாத் பதி­யுதீன்,  ஏ.எச்.எம்.பெளசி,  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் மற்றும் அசாத்­சாலி ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். எதிர்த்­த­ரப்­பி­லி­ருந்து எவரும் கலந்து கொள்­ள­வில்லை.

திங்­கட்­கி­ழமை  இரவு பள்­ளி­வா­ச­லுக்கு  வரு­கை­தந்த பொலிஸார்  விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு  தடை­வி­தித்­த­துடன் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­டு­மெ­னவும் அச்­சு­றுத்­தினர். 

இந்தச் செய்தி எழு­தப்­படும் வரை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்புப்  பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை.

விஸ்தரிப்புப் பணிகள்  முற்றுப் பெறாததால் பள்ளிவாசல் தரை விரிப்புகள் மழை நீரினால் நனைந்து தராவீஹ்  தொழுகையை மேற்கொள்ள முடியாத நிலையில்  இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ் விவகாரம் ஜனாதிபதி, பிரதமர், சட்டமும் ஒழுங்கும் மற்றும்  தெற்கு அபிவிருத்தி அமைச்சர், பொலிஸ்மா  அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

2 comments:

  1. No respect for LAW in the country...

    ReplyDelete
  2. NO RESPECT FOR LAW UNDER THE YAHAPALANA GOVERNMENT THAT WAS VOTED TO POWER BY THE MUSLIMS IN A VERY BIG WAY IN AUGUST 2016 GENERAL ELECTIONS.
    Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY.It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.