Header Ads



"வெறுப்புப்­ பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும், சட்­ட­மொன்றை இயற்றும் அவ­சரம் எழுந்­துள்­ள­து"

இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் பேச்­சுக்­க­ளுக்கு எதி­ரான தடைச்­சட்­டமொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் குறித்து பலரும் வலி­யு­றுத்தி வரு­கின்றனர். இந்­நி­லையில் விரைவில் இது குறித்த தனி நபர் பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தான் நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­வ­தாக கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அத்­துடன் கடந்த வாரம் மஹி­யங்­க­னையில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தத்தை தூண்டும் விதத்­தி­லான வெறுப்புக் கருத்­துக்­களை வெளியிட்­டி­ருக்­கிறார். இது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

ஏற்­க­னவே இவர் அளுத்­கம பகு­தியில் இன­வாத பேச்சு பேசி­யதன் விளைவை நாடு கண்­டு­கொண்­டது. தற்­போது அவ்­வா­றா­ன­தொரு சூழலை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அவர் மீண்டும் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வரு­கின்றார்.

இது பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். எனவே தாம­திக்­காது வெறுப்புப்­பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும் சட்­ட­மொன்றை இயற்றும் அவ­சரத் தேவை எழுந்­துள்­ள­து என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், 
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் இன­வா­தி­க­ளுக்கு கள­ம­மைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் நாட்டில் இனக்­கு­ரோதம் வளர்க்­கப்­பட்டு அதன் எதி­ரொ­லி­யாக நாட்டில் பாரிய விப­ரீ­தங்கள் ஏற்­பட்­டன.

2015 ஜன­வ­ரியில் நாட்டு பற்­றுள்ள மக்கள் இன­வா­தத்தை தோற்­க­டித்­தனர். அத்­துடன் இன­வா­தி­களின் கொட்டம் அடங்­கி­விடும் என மக்கள் எதிர்ப்­பார்த்­தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

இருந்­த­போ­திலும் முன்னர் இருந்­தது போன்று பொது­பல சேனா­விற்கு அரசின் ஆசீர்­வாதம் இல்லை. அவர்­களால் தற்­போது எத­னையும் செய்­து­விட முடி­யாது. இப்­போது அவர்­க­ளது கூட்­டங்­களை மக்கள் புறக்­க­ணித்து வரு­கின்­றனர். அவர்­களால் மீண்­டெழ முடி­யாது.

இருப்­பினும் அவர் ஏனைய மதங்­களை குறி­வைத்து இன­வாத கருத்துக்கள் மூலம் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து வரு­கின்றார். இதனால் முஸ்­லிம்­களும் ஏனைய சிறு­பான்­மை­யி­னரும் அச்­ச­ம­டை­கின்­றனர்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போதும் இன­வாத பேச்­சுக்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் தடுப்­ப­தற்கு சட்டம் கொண்டு வருவோம் என நாம் வாக்­கு­று­தி­ய­ளித்தோம். அதனை நிறைவேற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்­நி­லையில் தொடர்ந்தும் தாம­திக்­காது நாம் இவ்­வ­றா­ன­தொரு சட்­டத்தை கொண்­டு­வர வேண்டும்.

விரைவில் இன­வாத பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்தும் சட்டம் தொடர்­பி­லான தனி­நபர் பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நான் மேற்­கொண்டு வரு­கிறேன்.

அத்­துடன், அடுத்­த­வாரம் பாரா­ளு­மன்ற கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஞானசார தேரரின் உரை மற்றும் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளேன்.

இதேவேளை, ஏற்கனவே அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு அழுத்தமாக கூறியிருக்கிறேன் என்றார்.

 விடிவெள்ளி

No comments

Powered by Blogger.