Header Ads



நிமல்லான்ஸா பதவி நீக்கம்

-TM-

நீர்கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியிலிருந்து பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது இப்பதவிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டானை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக  நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர்.அலவத்த தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா, முன்னாள்  பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.