பள்ளிவாசல் விஸ்தரிப்பு பூர்த்தியடைந்ததும்தான், பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு வாபஸ் பெறப்படும்
கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பள்ளிவாசல் விவகாரத்தில் கொஹுவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பள்ளிவாசல் நிர்வாக சபையினரையும் வேலையாட்களையும் அச்சுறுத்தியமை, வேலைகளுக்கு தடை விதித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடொன்றினைச் செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணையை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடத்தினார். விசாரணையின்போது குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தாலும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இணக்கம் தெரிவிக்கவில்லை.
பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை முற்றாகப்பூர்த்தி செய்து கொண்டதன் பின் தனது முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் விசாரணையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Excellent....
ReplyDeleteJudicious decision of brother Shiraz Noordeen. May Almighty Allah fortify him further to withstand all the evils and unfairness and to stand up for the Muslim society.
ReplyDelete