Header Ads



இஸ்­லாத்தில் பலாத்­கார மத­மாற்றம் இல்லை - ஜனா­தி­பதி முன் துணிவை வெளிப்படுத்திய ரிஷ்வி முப்தி

சகல மதங்­களின் தலை­வர்­களும் இந்­நாட்டின் ஐக்­கி­யத்­துக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வுக்கும் பாடு­பட வேண்டும். அதற்­கான செயற்­றிட்­டங்­களை வகுக்க வேண்டும். இடைக்­கிடையே உரு­வாகும் சமய தீவி­ர­வா­தத்­தினை தடுப்­ப­தற்­கான பங்­க­ளிப்­பினைச் செய்ய வேண்டும் என ஜனா­தி­பதி சிறி­சேன சகல மதங்­களின் தலை­வர்­க­ளையும் வேண்டிக் கொண்டார். மத­மாற்றம் மற்றும் தீவி­ர­வாதம் போன்­ற­வற்றைத் தடுத்து பிரச்­சி­னைகள் உரு­வா­கா­ம­லி­ருக்க ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரினார்.
 
ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற சர்­வ­மத தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்கு தலைமை வகித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் இவ்­வேண்­டு­கோளை முன்­வைத்தார்.

நாட்டில் சம­யங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொண்­டுள்ள ஆர்­வத்தை சமயத் தலை­வர்கள் பாராட்­டி­ய­துடன் இந்தத் திட்­டத்­துக்கு தங்­க­ளது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தனர்.

பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ சமயங்களைச் சேர்ந்த 25 மதத்­த­லை­வர்கள் கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொண்­டனர். பௌத்த மதத் தலை­வர்கள் 10 பேரும் ஏனைய மதங்­க­ளான இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ மதங்­களின் தலா 5 தலை­வர்­களும் இதில் அடங்­கு­கின்­றனர்.

முஸ்­லிம்­களின் தரப்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஷ்வி முப்தி, பொதுச் செய­லாளர் எம்.எம்.ஏ. முபாரக், பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மட், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல், மௌலவி ஹஸ்­புல்லாஹ் என்போர் கலந்து கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர் அஷ்ஷெய்க் ரிஷ்வி முப்தி கலந்­து­ரை­யா­டலில் இஸ்­லா­மிய மதம் தொடர்­பான விளக்­கங்­களை வழங்­கினார். அவர் தனது உரையில், இவ்­வா­றான ஒரு நற்­கா­ரி­யத்தை சர்­வ­மதத் தலை­வர்கள் ஆரம்­பித்­தி­ருப்­பதை இன­வா­திகள் பல­வா­றாக விமர்­சிக்­கலாம்.

விமர்­ச­னங்­க­ளுக்கு அஞ்­சாது நாட்டின் நலன்­க­ருதி புரிந்­து­ணர்­வுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மாக நாம் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இஸ்லாம் நல்­லி­ணக்­கத்­தையும் புரிந்­து­ணர்­வையும் போதித்­துள்­ளது. குர்ஆன் இதனைத் தெளி­வாக விளக்­கி­யுள்­ளது. சமா­தா­னத்தை எவ்­வாறு முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று தெரி­வித்­துள்­ளது.

இஸ்­லாத்தில் பலாத்­கார மத­மாற்றம் மறுக்­கப்­பட்­டுள்­ளது. பலாத்­கார மத­மாற்றம் இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. ஒருவர் மதம் மாறிக் கொள்­வது அவ­ரது சுய விருப்­ப­மாகும். மத­மாற்றம் இஸ்­லாத்தில் பல­வந்­தப்­ப­டுத்­தப்­பட வில்லை.

இஸ்லாம் பிற மதங்­களை நிந்­திப்­ப­தையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் அனு­ம­திக்­க­வில்லை. பிற மதங்­களை நிந்­திப்­பதை இஸ்லாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. உங்­க­ளது மதம் உங்­க­ளுக்­காகும். எமது மதம் எங்­க­ளுக்­காகும்.

ஒவ்­வொரு மதத்­த­லை­வர்­களும் இந்த செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக தங்­க­ளது திட்­டங்­களை முன்­வைக்க வேண்டும். செய­ல­மர்­வொன்­றினை ஏற்­பாடு செய்து அந்தத் திட்­டங்­கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டு செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றார்.

பெல்­லன்­வில தேரர் கலந்­து­ரை­யா­டலில் கருத்து வெளி­யி­டு­கையில் சர்வ மதத் தலை­வர்­க­ளான நாம் முன்­னெ­டுக்கும் திட்­டங்­களை சிலர் எதிர்ப்­பார்கள். சமூக வலைத்­த­ளங்கள் முக­நூல்­களில் விமர்­சிப்­பார்கள். இவற்றை நாம் பொருட்­ப­டுத்தக் கூடாது.

நாட்­டி­னதும் நாட்டின் பல்­லின மக்­க­ளி­னதும் நலன் கருதி திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றார்.

மாலை 5 மணிக்கு ஆரம்பித்த கலந்துரையாடல் நோன்பு துறக்கும்  நேரம் வரை நீடித்தது. சர்வமதத் தலைவர்கள் அங்கு இடம்பெற்ற இப்தார் வைபவத்திலும் கலந்துகொண்டு விடைபெற்றனர்.

 சர்வ மதத் தலைவர்களின் அடுத்த அமர்வு எதிர் வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. அடுத்த அமர்வில் அனைத்து மதங்களும் இது தொடர்பான தமது திட்டங்களை முன்வைக்கவுள்ளன.     -ARA.Fareel-

2 comments:

  1. மாஷா அல்லாஹ்! நல்ல முயற்சி. வல்லவன் அல்லாஹ்வின் அருளும், ஹிதாயத்தும் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் மார்க்கத்தைப்பற்றிய சிறந்த தெளிவை வழங்கக்கூடிய சந்தர்ப்பம்.
    நாட்டில் உள்ள ஏனைய உலமாக்களுடைய கலந்துரையாடலுடன் முன்னெடுக்கும் போது தனிப்பட்டவர்கள் விமர்சிக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.