Header Ads



பிராங்போர்ட் + பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தும் சிறிலங்கன் எயார்லைன்


ஜேர்மனியின் பிராங்போர்ட், மற்றும் பிரான்சின் பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, பிராங்போட்டில் இருந்து கொழும்புக்கான கடைசி விமான சேவை எதிர்வரும் ஒக்ரோபர் 30 ஆம் நாள் இடம்பெறும்.

பாரிசில் இருந்து கொழும்புக்கான கடைசி விமான சேவை நொவம்பர் 6ஆம் நாள் நடைபெறும்.

சிறிலங்கன் விமான சேவை தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், வருமானம் குறைந்த இந்த இரண்டு வழித்தடங்களிலும்  சேவைகளை நிறுத்த சிறிலங்கன் விமானசேவை தீர்மானித்துள்ளது.

எனினும், லண்டனுக்கும் கொழும்புக்கும் இடையிலான சேவை தொடர்ந்து இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உபகண்டம், மத்திய கிழக்க, தூரகிழக்கு நாடுகளுக்கான பயணங்களில் சிறிலங்கன் விமான சேவை தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளது.

No comments

Powered by Blogger.