Header Ads



ஒரு பில்லியன் பெறுமதியான 85 கிலோ கொக்கேயின் பிடிபட்பட்டது - மைத்திரியும் பார்வை

பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்வது போன்று கொண்டுவரப்பட்ட 85 கிலோகிராம் நிறையுடைய கொக்கேயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் ஒரு பில்லின் ரூபாய் என சுங்கப் பிரிவினர் கணக்கிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக, சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவராலேயே இவை கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதேவேளை கைபற்றப்பட்ட இந்த போதைப் பொருளை மைத்திரிபாலவும் சென்று பார்வையிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.