Header Ads



நல்லாட்சிக்கு எதிராக 24ஆம் திகதி மாபெரும் பேரணி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தள்ளிப்போடும் செயற்திட்டங்களை பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -23- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த அரசு நல்லாட்சி எனும் போர்வையில் செயற்பட்டு வருவதாகவும், தற்போதைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் முதலான அனைத்து துறைகளிலும் நாடு வீழ்ச்சியடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேலும், நல்லாட்சிக்கு எதிரான பேரணிக்கு தாம் ஆயத்தமாக உள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.