Header Ads



இயற்கை அனர்த்தம் தொடர்பில், பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டவை


வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்ள வீடு­களில் தங்­கி­ யுள்ளோர் அவற்றை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்­லு­மாறும் எதிர்­வரும் நாட்­களில் நீரின் மட்டம் மேலும் அதி­க­ரிக்­கலாம் என்றும் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு போது­மான அளவு நிதியை வழங்க நிதி­ய­மைச்சு உறு­தி­ய­ளித்­துள்­ளது என்றும் அரசு குறிப்­பிட்­டது.

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ளவில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது கேள்வி, பதில் நேரத்தின் பின்னர் இடர் முகா­மைத்­துவ அமைச்சின் விசேட அறிக்­கைகள் விடுத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் அனு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா இதனைத் தெரி­வித்தார். அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த சில நாட்­க­ளாக நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லையால் மழை­வெள்ளம், மண்­ச­ரி­வு­களால் பாரிய பாதிப்­புக்­க­ளுக்கு மக்கள் உள்­ளா­கி­யுள்­ளனர்.

இதனால் 219 பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 4,14, 677 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 98, 0750 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 43 மர­ணங்கள் ஏற்­பட்­டுள்­ளன. 28 பேர் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். 286 வீடுகள் முற்­றாகச் சேத­ம­டைந்­துள்­ளன. 3057 வீடுகள் பகு­தி­யாக சேத­ம­டைந்­துள்­ளன. 594 பாது­காப்­பான இடங்­களில் மக்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். 61, 382 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத்­த­ர­வுகள் இன்­று­வ­ரை­யா­ன­தாகும்(நேற்று) எதிர்­வ­ரும நாட்­களில் இதில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். அர­நா­யக்க மண்­ச­ரி­வினால் பாரிய பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன .

களனி கங்­கையின் நீர்­மட்டம் உயர்ந்து வரு­கி­றது. எதிர்­வரும் 3 நாட்­க­ளுக்கு மழை தொடர்ந்து பெய்யும். எனவே மழை­வெள்­ளத்தில் சிக்­கிக்­கொண்டு இன்­னமும் வீடு­களில் தங்­கி­யி­ருப்போர் தத்­த­மது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்ல வேண்டும்.

எதிர்­வரும் நாட்­களில் நீரின் மட்டம் மேலும் உயரும் ஆபத்து உள்­ளது. இவ்­வாறு மக்கள் வெளி­யேறும் வீடு­க­ளுக்கு படை­யினர் பாது­காப்பை வழங்­கு­வார்கள். அது தொடர்பில் அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை.

முப்­ப­டை­யி­னரும் மீட்புப் பணி­களில் அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்றி வரு­கின்­றார்கள். தற்­போது கடற்­ப­டை­யி­னரின் 150 பட­குகள் மீட்புப் பணியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட போதும் போது­மா­ன­தா­க­வில்லை. எனவே எதிர்­வரும் நாட்­களில் பட­கு­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு தேவை­யான நிதியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் பணிப்­புரை விடுத்­துள்­ளனர்.

அத்­தோடு நிதி­ய­மைச்சும் இதனை வழங்க அனு­ம­தித்­துள்­ளது. நேற்று நானும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்­தவும் கொழும்பு நகரில் பாதிக்­கப்­பட்ட இடங்­களைப் பார்­வை­யிட்டோம்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு குறுகிய காலஇ நீண்ட காலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மரணமானவர்கள் தொடர்பில் 1 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வீடுகளை திருத்திக் கொள்வதற்கு ரூபா 1 இலட்சம் தொடக்கம் ரூபா 25 இலட்சம் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காப்புறுதி பொறுப்பு நிதியமொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.