Header Ads



உலகத் தலைவர்களால் எனக்கு, மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது - மைத்திரி பெருமிதம்


நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளால் பொய்ப் பிரசாரங்களால் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜப்பானில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடன் ஜப்பானின் நகோயா நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தாய்நாட்டின் மீது கரிசனையுடன் செலுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பு வழங்குமாறு ஜப்பானில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் சரிவர நிறைவேற்றப்படாமையால், தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டி ஏற்பட்டுள்ளதென்று ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜீ7 மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களால் தனக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை மூலம் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மீது சர்வதேசம் கெண்டுள்ள நம்பிக்கை உறுதியாவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.