Header Ads



யா அல்லாஹ் உன் புறத்திலிருந்து, அலெப்போ மக்களுக்கு உதவியை அனுப்பி வைப்பாயாக..!

-Musthafa Ansar-

சர்வாதிகாரி அசாத் அளப்போவை தீ மூட்டுகிறான்.

நீங்கள் காண்பது திகில் படம் அல்ல! நிஜம்,

குழந்தைகளும், பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.

அசாதின் அராஜகத்தை தட்டிக்கேற்க யாரும் இல்லையா?

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எங்கே?

ஷரீஅத்தின் காவலர்கள் எங்கே?

முஸ்லிம் இராணுவம் எங்கே?

வெறும் அறிக்கைகளும் வெற்று வார்த்தைகளும் உயிர்களைக்காப்பாற்றாது.
முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட இராணுவமும் தான் முஸ்லிம் உம்மத் தற்பொழுது முகம்கொடுக்கும் அவலத்திலிருந்து மீள்வதற்கான ஒரே வழி.

இஸ்லாமிய உம்மத் ஒற்றுமைப்பட்டு தனிப்பெரும் சக்தியாக மிளிர ஒத்துழைப்பார்களா முஸ்லிம் ஆட்சியாளர்கள்?

கொடுங்கோலன் அசாத் ரஷ்யாவின் புடின் மற்றும் ஷியா ஈரானின் ஆசிர்வாதத்தோடு சிரியாவை கொலைக்களமாக, மயானமாக மற்றிக்கொண்டிருக்கிறான்.

போஸ்னியாவிலும், கொசோவோவிலும் செய்தது போன்று அமேரிக்காவும், ஐரோப்பாவும் ஐ.நாவும் வேடிக்கை பார்க்கின்றன.

அரபு லீக்கும், OIC யும் என்ன செய்கிறார்கள்? வேடிக்கை பார்ப்பவர்களின் அனுமதிக்காக தவம் இருக்கிறார்களா?

யா அல்லாஹ் உன் புறத்திலிருந்து அலெப்போ மக்களுக்கு உதவியை அனுப்பி வைப்பாயாக!







No comments

Powered by Blogger.