Header Ads



தேசிய நல்லிணக்கம் தொடர்பாக ”மாணவர் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தம்”


தேசிய நல்லிணக்கம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் ”மாணவர் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தம்” எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று (05) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய நல்லிணக்கத்தை பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கும் ஓர் ஆரம்ப நடவடிக்கையாக இந்நிகழ்ச்சித்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

ஆக்கங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஜனாதிபதி  ஆரம்பித்து வைத்தார்.





No comments

Powered by Blogger.