Header Ads



நசீட் அஹமட் குறித்து, பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு விளக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட்டின் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரை இழிவுபடுத்தியதாக முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.