Header Ads



தாஜுதீனின் தந்தையிடம் இது விபத்து "வெறி சொரி" எனகூறிய அநுர - நீதிமன்றில் அம்பலம்

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் நேரத்தில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்க சிவில் உடையில் குறிப்­பிட்ட இடத்தில் இருந்­த­தாக விசா­ர­ணை­களில் சாட்­சி­யங்கள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர  தெரி­வித்தார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்­கவை வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் தீட்­டி­யமை, சாட்­சி­யங்­களை அழித்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் நேற்று பிற்­பகல் கைது செய்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு அவரைத் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரீஸ் முன்­னி­லையில் நேற்று மாலை ஆஜர்­ப­டுத்­திய போதே  இதனை அவர் குறிப்­பிட்டார்.

2012 மே 17 ஆம் திகதி அதி­காலை வேளையில் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாலிக்கா மைதான மதிலில் மோதிய நிலையில் எரிந்து கொண்­டி­ருந்த தனது காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார்.

இது தொடர்­பான விசா­ர­ணை­களை கடந்த 2015 பெப்­ர­வரி 28 முதல் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனித படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணை பிரிவு முன்­னெ­டுத்­துள்­ளது. அதன் படி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பா­க­வி­ருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா என்­பவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அப்­போ­தைய நார­ஹேன்­பிட்டி போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சரத் சந்­திர நீதி­மன்­றுக்கு இர­க­சிய வாக்­கு­மூலம் ஒன்­றி­னையும் வழங்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் பல சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்க, வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லையை விபத்­தாக காட்டி விசா­ரணை செய்ய தனக்கு கீழ் இருந்த அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­ட­தாக தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து மூன்று நாட்­க­ளாக தொடர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட அநுர சேனா­நா­யக்க நேற்று பிற்­பகல் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்பு குழுவால் கைது செய்­யப்­பட்டார். நேற்று காலை வாக்­கு­மூலம் வழங்க புல­னாய்வு பிரி­வுக்கு சென்ற அவரை பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சி.டபிள்யு.விக்­கி­ர­ம­சே­கர உள்­ளிட்ட குழு­வினர் கைது செய்­தனர்.

இத­னை­ய­டுத்து நேற்று மாலை 5 மணி­ய­ளவில் விசேட பாது­காப்­புக்கு மத்­தியில் புல­னாய்வு பிரிவு சிறப்பு வேன் வண்­டியில் சந்­தேக நப­ரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்கவை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்தனர்.

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு சார்­பாக மன்றில் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­கி­ர­ம­சே­கர, மனித படு­கொ­லைகள் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் விம­ல­சிறி ரவீந்­திர, கூட்டுக் கொள்ளை தொடர்­பான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டி சில்வா உப பொலிஸ் பரி­சோ­தகர் பிரேம திலக்க உள்­ளிட்டோர் மன்றில் ஆஜ­ரானார்.

சந்­தேக நப­ரான அநுர சேனா­நா­யக்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இதன் போது பீ அறிக்­கையை முன்­வைத்த பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர பின்­வ­ரு­மாறு  நீதி­வா­னிடம் கருத்­துக்­களை முன்­வைத்தார்.

" நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முன்னாள் போக்­கு­வ­ரத்து பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் பல­னாக வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தை விபத்­தாக காட்டி விசா­ர­ணை­களை மேற்­கொள்ள இந்த சந்­தேக நபர் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை உறு­தி­யா­கி­றது.

இது தொடர்பில் சந்­தேக நப­ரிடம் கடந்த 3 நாட்­க­ளாக விசா­ரணை  செய்து வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்ளோம். வஸீம் தாஜுதீன் படு­கொ­லைக்கு சதித்­திட்டம் தீட்­டி­யமை, சாட்­சி­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களை இவர் மீது நாம் சுமத்த எதிர்­பார்க்­கிறோம்.

அதனால் விசா­ர­ணைகள் தொடரும் நிலையில் அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நாம் கோரு­கிறோம்" என்றார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான அநுர சேனா­நா­யக்க சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா தனது வாதங்­களை முன்­வைத்தார். " எனது சேவை பெறுநர் மீது குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையில்  296, 198, 189 உள்­ளிட்ட பல பிரி­வு­களின் கீழ் புல­னாய்வு பிரி­வி­னரால் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

எது எப்­ப­டியோ சந்­தேக நப­ருக்கு எதி­ராக இந்த வழக்கை பொறுத்­த­வரை புல­னாய்வு பிரி­வினர் கூறும் கார­ணங்­க­ளுக்கு அமைய குற்­ற­வியல் சட்­டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்க முடி­யாது. சந்­தேக நப­ருக்கு எதி­ராக கொலைக் குற்­றச்­சாட்டு இல்­லாத நிலையில் அதனை நியா­யப்­ப­டுத்­தவும் முடி­யாது. அவ்­வாறு புல­னாய்வு பிரிவு முன்­வைப்­ப­தா­னது தனி மனித சுதந்­தி­ரத்தை பாதிக்கும் செயற்­பா­டாகும்.

அர­சியல் அமைப்பின் 13ஆவது சரத்தில் கைது, தடுத்து வைத்தல் மற்றும் விளக்­க­ம­றியல் ஆகி­யன சட்­ட­ரீ­தி­யாக அமைதல் வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இங்கு சதி முயற்சி என்ற குற்­றச்­சாட்டு 198 ஆவது பிரிவின் கீழேயே ஆரா­யப்­பட வேண்டும் அதனை 296 ஆவது பிரி­வுக்குள் எடுக்­கவே முடி­யாது.

198 ஆவது பிரி­வா­னது நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஒரு­வரால் பிணை வழங்க முடி­யு­மான குற்­றச்­சாட்­டுக்­களை கொண்­டது. எனவே சந்­தேக நப­ருக்கு பிணை வழங்க இந்த நீதி­மன்­றுக்கு பூரண அதி­காரம் உள்­ளது என்­பதே எமது வாத­மாகும்.

113ஆவது பிரிவில் நீதிவான் ஒரு­வ­ருக்கு பிணை வழங்க ஏது­வான பிரிவு 198 க்குள் அடங்கும் குற்­றங்கள் தொடர்பில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. மரண தண்­டனை, ஆயுள் தண்­டனை ஆகிய தண்­ட­ணை­களை பெறத்­தக்க குற்றம் ஒன்று தொடர்பில் அல்­லாது ஏனைய விட­யங்கள் தொடர்பில் பிணை வழங்­கு­வது தொடர்பில் எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை.

இந்­நி­லையில் புல­னாய்வு பிரிவு 296ஆவது பிரிவின் கீழ் சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­து­கின்­றமை எந்த அடிப்­ப­டையில் நியா­ய­மா­னது என எனக்கு தெரி­யாது.

ஒரு­வேளை எனது சேவை பெறுநர் இந்த சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­படின் அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஏழு வருட சிறை­யையே தண்­ட­னை­யாக வழங்க முடியும். அதனால் 113ஆவது பிரிவின் கீழ் சந்­தேக நப­ருக்கு பிணை வழங்­கு­வ­தற்கு இந்த மன்­றுக்கு எந்த தடையும் இல்லை.

 சந்­தேக நபர் புல­னாய்வு பிரிவு கோரிய அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் அங்கு வாக்­கு­மூ­லங்­களை வழங்­கி­யுள்ளார். அதனால் அவர் நீதி­மன்றை புறக்­க­ணிப்பார் என்ற சந்­தேகம் தேவை­யற்­றது.

அத்­துடன் இப்­பொ­ழுது இந்த சந்­தேக நபர் அதி­கா­ர­மற்ற ஒரு செல்­லாக்­காசு அவரால்  சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்க முடியும் என நம்­பவும் முடி­யாது. அதனால் சந்­தேக நப­ருக்கு பிணை வழங்­கு­மாறு தாழ்­மை­யாக இந்த மன்றை கோரு­கிறேன்" என்றார்.

இத­னை­ய­டுத்து அதற்கு எதிர்ப்பு தெரி­வித்த பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர பின்­வ­ரு­மாறு வாதிட்டார். கனம் நீதி­ப­தி­ய­வர்­களே இந்த சம்­ப­வ­மா­னது அதி­காலை 12.17 மணிக்கும் அதி­காலை 5.00 மணிக்கும் இடை­யிலே பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

அந்த நேர இடை­வெ­ளிக்­குட்­பட்ட அதி­காலை 2.45 முதல் 3.00 மணி வரை சந்­தேக நப­ரான இந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் வேறு ஒரு காரில் சம்­பவ இடத்தில் இருந்­துள்ளார். அதனை கண்ணால் கண்ட சாட்­சியம் இருக்­கி­றது.

இது தொடர்பில் தவ­றான பதிவை இடு­வ­தற்கு நார­ஹேன்­பிட்டி முன்னாள் போக்­கு­வ­ரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரிக்கும் சந்தேக நபர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு மறுநாள் கிருலப்பனையில் வைத்து வஸீம் தாஜுதீனின் பணப்பை கிடைத்தும் அது தொடர்பில் விசாரணை செய்ய சந்தேக நபர் தவறிவிட்டார். வஸீம் தாஜுதீனின் தந்தையிடம் இது ஒரு விபத்து இது தொடர்பில் மேலதிக விசாரணை தேவையற்றது என தனது அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ள சந்தேக நபர் இறுதியாக வெறி சொரி என கூறி விசாரணையை மூடி மறைக்க ஒத்தாசை வழங்கியுள்ளார்.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதால் சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் தற்போதும் அவ்வாறு அச்சுறுத்தல் உள்ளது.

முழு நாடும் சர்வதேசமும் இந்த வழக்கை உற்று நோக்கியுள்ள நிலையில் பிணை வழங்குவதால் பொது மக்களிடையே குழப்பம் ஏற்படலாம். எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்க கூடாது என்றார்.

இதனையடுத்து சந்தேக நபரின் சட்டத்தரணியான அனில் சில்வா அதற்கு ஆட்சேபனம் வெளியிட்டார்.  சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் வாதிகளின் தேவைக்காக அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் குழப்பப்படுவார்களே தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லை. இதனை நாம் இப்போதே அவதானிக்கின்றோம். இது ஒரு பழி வாங்கல் நடவடிக்கை என்ரார்.

இதனையடுத்து நீதிவான்  நிஸாந்த பீரிஸ் தனது முடிவை அறிவித்தார்.

முன் வைக்கப்பட்ட அனைத்து காரணிகள் தொடர்பிலும் எனது அவதானத்தை நான் செலுத்துகின்றேன். சந்தேக நபரின் சட்டத்தரணி  முன்வைத்த  சட்ட ரீதியிலான தர்க்கங்களை கவனத்தில்கொள்கிறேன். அதே சமயம்  சந்தேக நபர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்வைக்கும் விடயங்களும் மிக முக்கியமானவை.

எனவே சந்தேக நபர் தொடர்பில் இன்று முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நான் நிராகரிக்கிறேன்.  அதன்படி அவரை எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கிறேன்.

சந்தேக நபருக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், வைத்தியர் ஒருவர் முன் ஆஜர்படுத்தி தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன். என தெரிவித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ் வழக்கை 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அனுர சேனநாயக்க வெலிக்கடை விளக்கமறியல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1 comment:

  1. Masha Allah. Well done respected Nishantha Peiris. U r an upright judge. We salute thee. We sincerely hope and pray justice is served. And the culprits are brought to book. The whole nation knows who the murdererers are. They must be punished.

    ReplyDelete

Powered by Blogger.