Header Ads



வெள்ளம் பாதித்த வெல்லம்பிட்டியவில், அமெரிக்க படையினர்


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று -27- ஈடுபட்டது.

கொழும்பு- வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில், அமெரிக்க இராணுவத்தின் கடெற் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கடெற் அதிகாரிகள் குழுவொன்றுடன் இணைந்தே அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கப் படையினர், இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருந்தது.




1 comment:

Powered by Blogger.