Header Ads



மேற்கத்தைய நாடுகளுக்கு, இலங்கை அடிமைப்படுத்தப்படுகிறது - வாசுதேவ

வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தும் நிபந்தனைகளுடனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுக்கு கடன் வழங்குகின்றது எனத் தெரிவித்த மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார, அரச தலைவர்களுக்கு வெளிநாடுகளுக்கு வருமாறு அழைப்பு கிடைக்கின்றது. இதனால் நாடு பாதுகாக்கப்படவில்லை மாறாக மேற்கத்தைய நாடுகளுக்கு இலங்கை அடிமைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக் கொள்கின்றது. இதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் பல வரிகளை அரசு அதிகரிக்கும். அது மட்டுமல்லது இலவச மக்கள் நலன்புரிச் சேவைகளிலும் அரசு கைவைக்கும் ஆபத்துள்ளது.  

No comments

Powered by Blogger.