Header Ads



முல்லா ஒமரின் மகனுக்கு, புதிய பதவி

ஆஃப்கன் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மூத்த மகன் மொஹ்மத் யாகூப்புக்கு அந்த அமைப்பில் புதிய உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட பாதி பிராந்தியங்களின் இராணுவ நடவடிக்கைகளின் புதிய தளபதியாக யாகூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாலிபானின் உயர்மட்ட அரசியல் குழுவான் ரெஹ்பாரி ஷுராவும், முல்லா ஒமரின் சகோதரரும்தான் இவரை இந்த பதவிக்கு நியமித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முல்லா ஒமரின் மரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒமர் குடும்பத்தாருக்கும், புதிய தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூருக்கும் இடையில் நிலவி வந்த அதிகாரத்துக்கான சண்டை முடிந்துவிட்டதையே இந்த புதிய நியமனம் குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1 comment:

  1. This news not important and not required.....
    We shouldnt care fo them...as they are not in Islam...TERRORIST GROUP

    ReplyDelete

Powered by Blogger.