நல்லாட்சிக்காக வெட்கப்படுகிறோம் - புதிய தலைமுறை அமைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்த்து விட்டு நல்லாட்சியை கொண்டு வரும் வேலைத்திட்டத்தில் சம்பந்தப்பட்டமை குறித்து வெட்கப்படுவதாக புதிய தலைமுறை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புதிய தலைமுறை அமைப்பினர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது தாக்குதல் நடத்திய நபரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமித்தமையை கண்டிப்பதாக அந்த அமைப்பினர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.
கட்சி அரசியல் என்ற சேற்றுக்குழிக்குள் இவ்வாறான சம்பவங்கள் புதிதல்ல என்ற போதிலும் உயிர் அச்சுறுத்தல்கள், அவமதிப்புகளுக்கு மத்தியில் வென்று கொடுத்த இடம் இந்தளவு விரைவாக காட்டிக்கொடுக்கப்படும் என்பதை நாம் நினைத்து பார்க்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய தலைமுறை அமைப்பு நாட்டு மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவுமே எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளதே அன்றி கட்சி ஒன்றின் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை சமனலி பொன்சேகா, காமினி வியங்கொட, லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புதிய தலைமுறை அமைப்பினர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது தாக்குதல் நடத்திய நபரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமித்தமையை கண்டிப்பதாக அந்த அமைப்பினர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.
கட்சி அரசியல் என்ற சேற்றுக்குழிக்குள் இவ்வாறான சம்பவங்கள் புதிதல்ல என்ற போதிலும் உயிர் அச்சுறுத்தல்கள், அவமதிப்புகளுக்கு மத்தியில் வென்று கொடுத்த இடம் இந்தளவு விரைவாக காட்டிக்கொடுக்கப்படும் என்பதை நாம் நினைத்து பார்க்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய தலைமுறை அமைப்பு நாட்டு மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவுமே எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளதே அன்றி கட்சி ஒன்றின் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை சமனலி பொன்சேகா, காமினி வியங்கொட, லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
Post a Comment