Header Ads



நீதிமன்றம் அதிரடி - மஹிந்தவுக்கும் பங்காளிகளுக்கும் பேரிடி, சாலிகாவில் பிரவேசிக்கத் தடை


மேதினக் கூட்டத்தை சாலிகா மைதானத்தில் நடாத்துவதற்கு எதிர்பார்த்திருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடை உத்தரவானது இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என நாரஹேன்பிட்டி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து மேதினக் கூட்டத்தை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்திக் காட்டுமென அக்கட்சியின் ஏற்பாட்டாளர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணை பதிவு செய்திருந்தமையினாலேயே குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.