உடதலவின்னயில் 3 வாகனங்களும், கட்டிடமும் தீக்கிரை (படங்கள்)
JM. HAFEEZ-
வத்துகாமம் பொலீஸ் பிரிவில் உடதலவின்ன பிரதேசத்தில் வாகனங்கள் முன்றும் ஒரு கட்டிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இரவு (29.4.2016) வத்தேகம பொலீஸார் ரோந்துசேவையில் ஈடுபட்டிருந்த போது கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர். அச்சமயம் அவ்விடத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதையும் பொலீசார் கண்ணுற்றுள்ளனர். இருப்பினும் அவ்விடத்தில் இருந்த முடிவெட்டும் நிலையம் ஒன்று முற்றாகச் சேதமடைந்தும் அதங்கு அண்மையில் மோட்டார் வாகனம் ஒன்றும் முற்றாக எரிந்த நிலையிலும் காணப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
வத்துகாமம் பொலீஸ் பிரிவில் உடதலவின்ன பிரதேசத்தில் வாகனங்கள் முன்றும் ஒரு கட்டிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இரவு (29.4.2016) வத்தேகம பொலீஸார் ரோந்துசேவையில் ஈடுபட்டிருந்த போது கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர். அச்சமயம் அவ்விடத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதையும் பொலீசார் கண்ணுற்றுள்ளனர். இருப்பினும் அவ்விடத்தில் இருந்த முடிவெட்டும் நிலையம் ஒன்று முற்றாகச் சேதமடைந்தும் அதங்கு அண்மையில் மோட்டார் வாகனம் ஒன்றும் முற்றாக எரிந்த நிலையிலும் காணப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நடந்துள்ள இடத்திற்கு சற்று தொலைவில் மற்றும் இரு லொரிகள் மீது தியிட்டு எரிக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளபோதும் லொரிகள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன.
உடதலவின்ன புகையிரத நிலையத்திற்கு அண்மித்த வியனமுல்ல பாதையில் இது இடம் பெற்றுள்ளது. இது திட்டமிட்ட ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனப் பொலீசார் சந்தேகிக்கின்றனர். சிகை கத்தரிக்குமிடத்து முன் கதவை உடைத்தே உற்சென்று தீயிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக இதுவரை எதுவித தடையமும் பொலீசாருக்குக் கிடைக்கவில்லை. இது ஒரு சதி நாச வேலையா, சொந்தக் குரோதமா அல்லது பழிவாங்கலா என்பது தெரியாது. பொலீஸ் மோப்ப நாய்கள்; கொண்டு வரப்பட்டு பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம் பெறுகின்றன.
Post a Comment