Header Ads



சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு, தப்பியோடியவர் கைது

சாவகச்சேரியில் வீடொன்றிள் வெடிமருந்துகள் மற்றும் தற்கொலை அங்கி மீட்கப்பட்டு உள்ளதால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தினை தொடர்ந்து தப்பியோடிய வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட வெடிபொருட்கள் யுத்தம் இடம்பெற்றவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீட்டில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தாங்கள் அந்த வீட்டில் சோதனை நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.