Header Ads



தயார் நிலையில் படையினர்

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன்கட்டுப் பகுதிகளில் உள்ள பற்றாலியன் பயிற்சிப் பாடசாலைகளில் இந்த சிறப்பு போர்ப்பயிற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள டிவிசன்கள், பிரிகேட்கள், முன்னரங்க பாதுகாப்பு பிரதேசம், மற்றும் பற்றாலியன்களில் பணியாற்றும் படையினருக்கே இந்த சிறப்பு போர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

68ஆவது டிவிசன் படையணியின் கீழ் உள்ள 7ஆவது கெமுனுவோச் படைப்பிரிவுக்கான பயிற்சி புதுக்குடியிருப்பு பற்றாலியன் பயிற்சிப்பாடசாலையில் இடம்பெறுகிறது. இங்கு 9 அதிகாரிகள் மற்றும் 352 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதுபோல, 64ஆவது டிவிசனின் கீழ் உள்ள 14ஆவது சிங்க ரெஜிமென்டுக்கு, முத்தையன்கட்டு பற்றாலியன் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு 11 அதிகாரிகள் மற்றும் 222 படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சிறப்புப் பயிற்சிகளின் போது, சிறிலங்கா படையினருக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போரற்ற சூழ்நிலையிலும் சிறிலங்கா படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவே சிறிலங்கா இராணுவம் அவர்களுக்கான முழு அளவிலான பயிற்சிகளை மீள ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.