Header Ads



அப்பாவி முஸ்லிம்கள் மீது, தீவிரவாத முத்திரை குத்தாதீர்கள் - மோடிக்கு எச்சரிக்கை..!

தீவிரவாத முத்திரைக் குத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்கள், கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் 99% பேர் நிரபராதிகள் என நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டினர்.

பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு முஸ்லிம்களை கைது செய்யும் அதிகாரிகளின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகாரிகளின் அடாவடி செயல்களுக்கு, இந்த அரசு கடிவாளம் போடமறுத்தால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியதுவரும் என முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பேட்டியின்போது, ஜமாத்தே இஸ்லாமியின் சலீம் அஹ்மத், எஞ்சினியர் முஹம்மத் அஹ்மத்,

ஜம்யியதுல் உலமா சார்பில், மவுலானா அஷ்ஹத் ரஷீதி, மவுலானா அப்துல் ஹமீத் நுஃமானி,

முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவரத் அமைப்பின் தலைவர் நவீத் ஹாமித்,

மில்லி கவுன்சில் சார்பில் முஷர்ரப் அஹ்மத்,

ஜமியியத் அஹ்லே ஹதீஸ் சார்பில் மவுலானா ஷீஸ் தைமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு செய்தியாளர்கள் முன்னிலையில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

No comments

Powered by Blogger.