Header Ads



பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண்கல், ஆபத்து பற்றி விஞ்ஞானிகள் எதிர்வுகூறல்

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல் அடுத்த மாதம் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பநிலை 8° செல்சியஸ் ஆல் குறைவடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 28 ஆம் திகதி பூமியை தாக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த விண் கல் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பம் உறை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் பல லட்சக் கணக்கான கற்கள் சஞ்சரித்து உலாவருகிறது. இதில் பூமிக்கு அருகாமையில் சஞ்சரிக்கும் சுமார் 12,000 விண் கற்களை , நாசா விண்வெளி நிலையம் அவதானித்து வருகிறது. குறித்த இந்த விண் கல் சுமார் 1 கிலோ மீட்டர் அகலம் கொண்டது என்றும் இது பூமியை தாக்க மிகவும் அரிய சந்தர்ப்பமே உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் அது கடலில் விழுவதற்கு பதிலாக பூமியின் தரையில் மோதினால் அதில் இருந்து உண்டாகும் புகை மண்டலம் 10 ஆண்டுகளாக வளிமண்டலத்தில் இருக்கும் என்றும் தூசித் துகள்கள் அடங்கி மீண்டும் பூமியில் வாழ 6 ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தூசித் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் மோதி சூரிய ஒளியின் அளவை குறைத்து விடும் என்றும் வளிமண்டலத்தில் ஓசோன் படலமும் 55 சதவீதம் குறைந்துவிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. பூமியுடனான ஒப்பீட்டளவில் இந்தக்கல் வெறும் ஒரு தூசித்துகளே. இதனது பூமியுடனான மோதுகைக்கு இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியுமாயின் - மறுமை நாளுக்கான கோழ்கள் கோழ்களுடன மோதும்போது - மலைகள் பரப்பப்பட்ட துகழ்களாக மாறிவிடும் என்பது எத்துணை யதார்த்தம் என்பதை நாம் சிந்தித்தால்------------ அடுத்தவன் நிட்சயமாக நமது சகோதரனாகவே தென்படுவான்.

    ReplyDelete
  2. ஆரம்பிச்சிட்டான்கள்யா!

    '1400 வருடங்களுக்கு முன்பே இந்தக்கல்லைப்பற்றி...' என்று தொடங்கி அண்டப்புளுகுகளை அவிழ்த்துவிட ஒரு கூட்டம் எப்போதும் ஸ்மார்ட் போன், மவுஸ் மற்றும் கீபோர்டுடன் தயாராகவிருக்கின்றது!

    ReplyDelete
  3. உலகம் அழியும் நாள் நெருங்கிவிட்டது விதண்டாவாதங்களை விட்டுவிட்டு நல்லமல்கள் செய்வோம் அழ்ழாஹ்வை நெருங்குவோம்

    ReplyDelete

Powered by Blogger.