Header Ads



29 ஆவது சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி முன் பதவியேற்றார்


மேலதிக சொலிசிட்டரான ஜயந்த ஜயசூரிய, சற்றுமுன்னர் (11) இலங்கையின் 29ஆவது சட்ட மாஅதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொணடார்.

நேற்றைய தினம் (10) இது குறித்தான நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு சபை முடிவெடுத்ததோடு, குறித்த முடிவு ஜனாதிபதியின் அனுதிக்காக அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அனுமதியை அடுத்து இன்றைய தினம் (11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கையின் 28 ஆவது சட்ட மாஅதிபராக யுவஞ்சன் விஜேதிலக கடமையாற்றி ஓய்வு பெற்றதோடு, அதனை அடுத்து பதில் சட்ட மாஅதிபராக சுஹத கம்லத் கடமையாற்றி வந்தார்.

No comments

Powered by Blogger.