Header Ads



வாயை மூடிக்கொண்டு இருங்கள் - ஆசாதுதீன் ஒவைசிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று ஆசாதுதீன் ஒவைசிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.

எம்ஐஎம் கட்சியின் தலைவர் ஆசாதுதீன் ஒவைசிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்து உள்ளது. வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு ஐ.எஸ். தீவிரவாதிகள் எனக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர் என்று ஐதராபாத் எம்.பி. ஆசாதுதீன் ஒவைசி கூறிஉள்ளார். ”உங்களுக்கு உண்மை தெரியாது என்றால், ஐ.எஸ். விவகாரத்தில் வாயை மூடிக்கொண்டு இருப்பது உங்களுக்கு நல்லது, விரைவில் ஐ.எஸ். இந்தியா மீது படையெடுக்கும்,” என்று ஒவைசிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அபோடலவுட் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் டுவிட்டரில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

”இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை அவமதித்துவிட்டீர்கள். ஐ.எஸ்.யை எதிர்த்தால் நரகத்திற்கு தான் வழிசெய்யும், அதற்கு முன்னதாக திருந்திக்கொள்ளுங்கள்,” என்று இரண்டாவது டுவிட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஆசாதுதீன் ஒவைசி சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

2 comments:

  1. இதிலிருந்தே மீண்டும் உறுதியாக தேர்கிறது ஐ.எஸ். என்பது (இஸ்ரேலினால் உருவாக்கப்பட்ட) ஒரு "பயங்கர"வாத அமைப்பு என்று.

    ReplyDelete

Powered by Blogger.