Header Ads



எனது தந்தையை சிறையில் தள்ளினாலும், அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் - நாமல் ராஜபக்ச

தன்னை சிறையில் தள்ளினாலும் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்றால், அவர் ஏதோ ஒரு காணரத்திற்காக சிறையில் அடைக்கப்படலாம் என சில நபர்கள் தன்னிடம் கூறியதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.  தேசிய பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தற்போதாவது அரசியலில் இருந்து ஓய்வுபெற்றால் நல்லாதுதானே என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல்,

ஆமா சில துரைமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பா அரசியலில் இருந்த ஓய்வுபெறவிட்டால், ஏதாவது ஒன்றுக்காக உங்களை சிறையில் தள்ளுவார்கள் என கூறியுள்ளனர். என்னை சிறையில் தள்ளினாலும் எனது அப்பா அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என்பதை நான் அந்த துரைமாருக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

2 comments:

  1. ஆமாம். இறந்தாலும் கூட ஆவியாக வந்தேனும் அரசியலில் இருப்பார். அவரது பேராசை அடங்காதது.

    ReplyDelete

Powered by Blogger.