இலங்கையில் விழவிருந்த மர்மப் பொருள், பூமியை அடைய முன் எரிந்திருக்கலாம்..?
இன்று (13) இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட ´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, எரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.
இன்று குறித்த மர்மப் பொருள் விண்ணில் இருந்து விழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு, மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment