பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்
மாணவர்கள் விவகாரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒழுங்குப்பிரச்சினையை அடுத்து அவைக்குள் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.

Post a Comment