சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்த 450 மில்லியன் டொலர்
சுவிட்சர்லாந்து வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பணத்தை இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வைப்பாளர்களது பணமும் இவற்றில் அடங்குகின்றது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முதலீடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment