Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நல்லாட்சிக் கொள்கையை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 35 உறுப்பினர்கள் முதல் தொகுதியாக நேற்று முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மொரட்டுவை கட்டுக்குருந்த பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது.

நேற்று ஆரம்பமான துப்பாக்கி சுடும் பயிற்சி இன்றுவரை இரண்டு நாட்களாக நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஆகியவற்றை பயன்படுத்தி தற்காப்புக்காக துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.