மினாவில் பல உயிர்களை காப்பாற்றிவிட்டு, உயிர்துறந்த மன்சூரி
சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு உதவி செய்வதில் முன்னணியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான India Fraternity Forum (IFF) ல் அங்கத்தினராக மினாவுக்கு வந்தார். 950 பேர் இவ்வாறு தொண்டு செய்ய வந்திருந்தனர். மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் தனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நெரிசலில் சிக்கி இறந்துள்ளார் மன்சூரி.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"
இவரது தாயும் தந்தையும் இந்த வருட ஹஜ்ஜூக்கு வந்துள்ளார்களாம். அவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் அவர்கள் எங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இறைவன் இவரது தாய் தந்தையரை நலமுடன் இருப்பிடத்தில் சேர்ப்பிப்பானாக!
மன்சூரி செய்த இந்த செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். நன்மையை நாடி ஒரு செயலை செய்து அதில் இன்று உயிர் பிரிந்துள்ளது. மன்சூரியின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனபதியில் சேர்ப்பானாக! இவரது தாய் தந்தையர் நலமுடன் தங்களின் இருப்பிடத்தை அடைவார்களாக! சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் பல லட்சம் ஹாஜிகளுக்கு இறைவன் நன்மையை வாரி வழங்குவானாக!
தகவல் உதவி
சவுதிகெஜட்
சுவனப் பிரியன்

Allahu Akkbar, Allah will you the Jannah
ReplyDelete