Header Ads



மஹிந்த செய்த அதே தவ­றினை, இந்த அர­சாங்­கமும் செய்­வது முட்டாள்தனமானது - சம்­பிக்க

தேவை­யற்ற வகையில் சர்­வ­தே­ச ­த­ரப்­பிடம் வாக்­கு­று­தி­களை கொடுத்து மஹிந்த செய்த அதே தவ­றினை இந்த அர­சாங்­கமும் செய்­கின்­றது. அமெ­ரிக்­காவின் இந்த தீர்­மான வரைவை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக கூறி­யி­ருப்­பது சர்­வ­தேச விசா­ர­ணையை ஏற்­றுக்­கொண்­ட­மைக்கு சம­மா­ன­தாகும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். சர்­வ­தேச மட்டத்தில் நாம் எதிர்­கொள்ளும் சிக்­கல்­களை தெரி­வித்தும் முட்­டாள்­த­ன­மான முடி­வு­களை எடுப்­ப­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். 

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­துள்ள தீர்­மான வரை­வுக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்ள நிலையில் அது இலங்­கையின் உள்­ளக செயற்­பா­டு­களை பாதிக்­காதா என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்க விசா­ரணை ஒன்று அவ­சியம். இலங்­கையின் இரா­ணு­வத்தை நியா­யப்­ப­டுத்­தவும் நாட்டின் மீதான அவப்­பெ­யரை நீக்­கவும் இந்த விசா­ர­ணையை நடத்­த­வேண்டும். ஆனால் இந்த விசா­ர­ணைகள் உள்­ளக பொறி­மு­றை­யாக அமைய வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அதை வலி­யு­றுத்தும் வகையில் அர­சாங்கம் செயற்­பட வேண்டும் என்­பதை தொடர்ச்­சி­யாக நாம் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆனால் இப்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நான்கு நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள வரைவுத் தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் வகையில் தான் அமைந்­துள்­ளது.

அவர்­க­ளது கோரிக்­கை­களும் பரிந்­து­ரை­களும் சர்­வ­தேச தலை­யீட்டை முழு­மை­யாக ஏற்­ப­டுத்தும் வகையில் தான் அமைந்­துள்­ளது. அதனால் இலங்கை அர­சாங்­கத்­தினால் சுயா­தீ­ன­மாக செயற்­பட முடி­யாது. இலங்­கையில் உள்­ளக பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தும் வகையில் இலங்­கையின் செயற்­பா­டுகள் அமைய வேண்டும் என்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்­தி­ருந்தோம். சர்­வ­தேச விவ­கா­ரங்­களை கையாளும் விடயம் பிர­த­ம­ருக்கு நன்­றா­கவே தெரிந்தும் கடந்த கால தவ­று­களை இப்­போதும் செய்­வ­தா­னது சிக்­கல்­க­ளையே ஏற்­ப­டுத்தும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே தவ­று­களை செய்தே நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தினார். இலங்கை விவ­கா­ரங்­களில் தேவை­யற்ற வாக்­கு­று­தி­களை சர்­வ­தேச தரப்­பிடம் வழங்­கி­ய­மையே இன்­று­வரை நாம் அழுத்­தங்­களை எதிர்­கொள்ள கார­ண­மாக அமைந்­துள்­ளது. இவ்­வா­றான நிலையில் இந்த அர­சாங்­கமும் தேவை­யற்ற வாக்­கு­று­தி­களை சர்­வ­தே­சத்­திடம் வழங்கி மீண்டும் அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிப்­பது முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டாகும். ஆகவே இப்­போது நாம் அமெ­ரிக்­காவின் தீர்­மான வரைவுக்கு இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தென்று தீர்­மா­னித்­தி­ருப்­பது இலங்கையை சிக்கலில் உட்படுத்தும் செயற்பாடாகும் என்றார்.

No comments

Powered by Blogger.