Header Ads



இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களை, கண்காணிக்க புதிய அரச நிறுவனம்

இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களைக் கண்காணிக்க புதிய அரச நிறுவனம் ஒன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் பத்திரிகைகள் தொடர்பில் கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு செயற்படுகின்றது.எனினும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் அவ்வாறான ஒருகட்டமைப்பு இல்லை.

இதன் காரணமாக இலத்திரனியல் நிறுவனங்கள் தங்கள் வர்ததகப் போட்டிக்கு ஏற்ப செய்திகளை திரித்தும், மறைத்தும் செய்திகளை வெளியிடுகின்றன.

இதனைக் கண்கானிக்கவும், இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகளில் கட்டுப்பாடொன்றை ஏற்படுத்தவும் புதிய அரச நிறுவனம் மூலமாக நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது குறித்து அவர் தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கருத்து வெளியிட்டிருப்பதாக , பிரதமருக்கு நெருக்கமான சிங்கள செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.