ரோஸிக்கு சந்தேகம்,
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ரோஸி சேனாநாயக்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கவில்லை.
தனது விருப்பு வாக்குகளை மீள் எண்ணுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி கேட்டிருந்ததற்கு, இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் பெற்ற விருப்பு வாக்குகளில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment