Header Ads



மஹிந்தவிற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் தொடர்பில் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில்போட்டியிடும் மஹிந்தவிற்கு முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் ஏனைய வேட்பாளர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.