இருதய நோயினால் பாதிக்கப்பட்ட, சகோதரருக்கு உதவுங்கள்
புல்மோட்டை, நூறானியா நகரில் வசிக்கும் அப்துர் ரஹ்மான் யாகூப் (44) இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் இவருக்கு உடனடியாக (இம் மாதம் 20 ம் திகதிக்கு முன்) இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்க்கு சுமார் ஆறு இலட்ச்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் (650,000.00) செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் சத்திர சிகிச்சைக்கு செலவாகும் இவ்வளவு பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியாதுள்ளதால், தாராள மனம் படைத்தவர்கள், அல்லாஹ்வின் உதவியுடன் இவரின் உயிரைக்காக்க தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றனர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு : 0094772131780 / 0094717616110
Bank Account: 72028477 – BOC- Pulmoddai. (Y.M. Riyas)
Post a Comment