Header Ads



கடிதம் எழுதி வைத்துவிட்டு, இளம் பிக்கு தற்கொலை

பதுளை -     ஹாலிஎல விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹாலிஎல - உடுகொஹுவில ஸ்ரீ போதிராஜா விகாரையில் உள்ள களஞ்சிய அறையில் 18 வயதான குறித்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

எனினும். அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பதுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.


1 comment:

  1. விசாரணைகள் மூடி மறைக்கப்படும். இளம் பிக்குகளின் (தற்)கொலை விடயங்கள் ஒருபொழுதும் விரிவாக நடை பெறுவதில்லை. "எந்த நேரமும் ரேடியோ கேட்க வேண்டாம்" என்று பெரிய பிக்கு கண்டித்தார், அதனால் தற்கொலை, அல்லது "மொபைல் போனில் நேரத்தை செலவிட வேண்டாம்" என்று மூத்த பிக்கு ஒருவர் தனியாக அழைத்து அறிவுரை கூறினார், அதனால் தற்கொலை என்றமாதிரித்தான் தான் முடிவு வரும்.

    ReplyDelete

Powered by Blogger.