Header Ads



வீரகுல பகுதியில் இடம்பெற்ற மோதலில், காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வீரகுல பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேர் அசிட் வீச்சுக்கு இலக்கானதாகவும், ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

நேற்று (14) மாலை இடம்பெற்ற எல்லே விளையாட்டுப் போட்டியின்போது இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.