Header Ads



என் மீதான நம்பிக்கையை சீர்குழைக்கமாட்டேன் - பள்ளிவாசலில் நின்றபடி மைத்திரி உறுதியளிப்பு (வீடியோ)

நாட்டின் அனைத்து சமூகங்களும் தம்மீது கொண்ட நம்பிக்கையை ஒருபோதும் சீர்குழைக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

பொலன்னறுவை - கதுறுவலை நகரில் ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்று இன்றைய 22-02-2015 தினம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இனம், மத பேதங்களின்றி நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு உள்ள உரிமையை அதிகபட்சமாக உறுதிப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் தமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

அந்த எதிர்பார்ப்பை தாம் எந்த தருணத்திலும் நிறைவேற்றவே முனைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.