அனுரகுமார திஸாநாயக்கவின் கனவு
மக்கள் விடுதலை முன்னணியின் இலக்கு 2020ஆம் ஆண்டில், நாட்டில் வேலை செய்யும் மக்கள் மற்றும் குறைந்த வர்க்கம் அதிகாரத்தில் இருந்து ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும் அதற்கான தலைமைத்துவத்தை மக்கள் விடுதலை முன்னணி வழங்குவதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலம் மாற்றம் மற்றும் மக்கள் சவால் என்ற தலைப்பில் காலி நகர மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எமக்கு இருப்பது நீண்ட தூர ஓட்ட பயணம். நான்கு வருடங்களின் பின்னர் எதிர்வரும் தேர்தலில் அக்கால அரசியலமைப்பே காணப்படும். ஊழல் மோசடிகள் திருடர்களை பிடித்துக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை.
2020 ஆம் ஆண்டு இடம் பெறும் தேர்தலில் நாங்கள் பலத்தை பெற வேண்டும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் இருக்க வேண்டும்.
நாட்டில் நிலையான வெற்றியை பெற்றுத் தரக்கூடிய சமூகம், பொருளாதாரம் என்ற ரீதியில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய முன்னணியாகவும், வேலை செய்யும் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் அரசாங்கத்தையும் உருவாக்குவோம்.
அக்கட்சியானது அறிஞர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், மற்றும் வேலை செய்யும் மக்களை கொண்டதாகும்.
அக்கட்சியானது விரிவாக்கமடைந்த முன்னணியாகவும் 2020 ஆம் ஆண்டில் அதிகாரத்தை மாற்றக்கூடிய முன்னணியாகவும் காணப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment