மாமியார் வீட்டில் கோதபாய, குற்றவாளிகளை தண்டிக்காததே மஹிந்தவின் தோல்விக்கு காரணம் என்கிறார்
-Gtn-
சொந்த வீடு ஒன்று கூட தமக்குக் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாரியளவில் சொத்துக்களை திரட்டியதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கியிருப்பதற்கு இதுவரையில் தமக்கு ஒர் சொந்த வீடு கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் தயாராது வீட்டிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனுக்கு தண்டனை விதிப்பதில்லை என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முப்படைத்தளபதிகள் ஆகியோர் இணக்கம் வெளியிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரதும் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை கண்டு பிடிக்கும் நோக்கில் இவ்வாறு தாம் குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் கப்பல்கள் போன்றன தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் காணப்படுவதாகவும் அவற்றை தம்மாலேயே பார்வையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் தண்டிக்கப்படாமையே தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
உங்களையும் சேர்த்துத்தானே சொல்கின்றீர்கள்..?
ReplyDeleteLife in the USA is better for anyone from a third world country in Asia. Anyone
ReplyDeletewill choose a better living condition.For you,Srilanka under your brother was
very much better than the USA ! Why ? Nobody here will accept if you say that you
wanted to serve your mother land because it shouldn't be only under your brother !
YOU RETURNED FROM THE USA BECAUSE HERE YOU ARE BETTER OFF
UNDER YOUR BROTHER THAN IN USA.The truth !
இவர் ஒரு short memory patient என நினைக்கிறேன் செய்தவற்றை சிருது நேரத்தில் மறந்து விடுவார்
ReplyDeletea very funny joke!
ReplyDeleteYou had limited power to utilize the safety & security behalf of th govt in SLK which u abused, misused & corrupted mostly against to the innocent, Politicians minorities. Even though you extended as a secret Govt Criminal, Killer, Smuggler,contractor, founder Member of Bodu balla sena, Gris man team Leader, white Van operator and other many crimes. and you thought that you are the only one brilliant and you made others fools,Every single human watching you and your illegal activities while you were working as a uncultured barbarian, but we are not blind and still you are denying the truth & trying to be a over smart Person.
ReplyDelete