Header Ads



வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைத்தாலே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்

வடக்கிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமானால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் காணியுரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்திலேயே தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.