இலங்கையணி உலகக் கிண்ணத்தை வெல்ல நரேந்திர மோடி, மைத்திரிக்கு வாழ்த்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று 13-02-2015 காலை தொலைபேசி அழைப்பொன்றை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்லும் ஜனாதிபதி மற்றும் குழுவினரை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் மோடி, 1996ல் போன்று இம்முறையும் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்றும், அதற்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment